Tuesday 10 January 2017

குடிபோதையில் கார் ஓடியதால் நேர்ந்த பயங்கர விபத்து - மரத்தில் மோதி அப்பளமாகிய கார்!

குடிபோதையில் கார் ஓடியதால் நேர்ந்த பயங்கர விபத்து - மரத்தில் மோதி அப்பளமாகிய கார்!






பஞ்சாப் மாநிலம், லூதியான நகரில் நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்குவதற்கு முன்னர் 5 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து சமூக வலைதளம் ஒன்றில் குழு படத்தை வெளியிட்டுள்ளனர். அதன்பின்னர் ஜாலியாக டிரிப் அடுத்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மணிக்கு 150 கிமீ வேகத்தில் அந்த கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த காரில் இருந்த அனைவரும் குடி போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ஹோண்டா சிட்டி கார் வாங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்தாலாவது, இனி குடிபோதை டிரைவிங்கை தவிர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...!!

Propellerads

0 comments: